கிறிஸ்துவர்களின் ஓவியங்களில் நம்பிக்கை, அதனால் ஏற்படும் முன்னேற்றங்கள், வெற்றிகள் இவற்றைக்குறிக்கும் வகையில் மரகதப் பச்சையை உபயோகப்படுத்தினார்கள். பச்சை வண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஓவியக்கலையின் முக்கிய அம்சம் மகோன்னதமான ஒரு சிறப்பு உடையது பச்சை நிறம் என்றால் அது மிகையாகாது.
பச்சை நிறம் இஸ்லாமியர்களின் புனிதமாகவும், சிறப்பான ஒரு வண்ணமாகவும் கருதப்படுகிறது. தெய்வத்தின் நிறம், கடவுளின் அம்சம்.
பச்சை ஐரிஷ் மக்களால் அதிர்ஷ்ட நிறமாக அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நிறம். ஐரிஷ் மக்களின் சமூக முத்திரையைப் பெற்ற நிறம். நட்புக்கு வழி வகுக்கும் என நம்புபவர்கள் அவர்கள். அதனால் மிகவும் பயன்படுத்தி வந்தார்கள். நம்பிக்கையின் சின்னமாக புனிதத்தைக் குறிக்கும் உயர்ந்த நோக்குடனும் வணங்கி வந்தார்கள். மதிக்கத்தகுந்த போற்றக்கூடிய நிறம் பச்சை என ஐரிஷ் மக்களால் கருதப்பட்டது.
பச்சை நிற உடைகள், அடுத்த மாதம் . . .