உடல் ரீதியாக, மனநலம் பாதிப்புள்ளானவர்களை அவர்களின் துக்கம், கோபம் போன்ற பல மன பாதிப்புக்களை மேலும் தூண்டிவிடவல்லது சிவப்பு நிறம். இந்நிறம் அவர்களின் நோயை அதிகப்படுத்தி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும். அவர்களிருக்கும் இடத்தில் இந்தக் கலர் உள்ள பொருட்கள், உடை மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட உடைமைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க வழி வகுக்கும். வீட்டிலோ அல்லது மனநல மருத்துவ மனையிலோ இந்த நிறம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவர்களின் மேல் உங்களுக்கிருக்கும் அக்கறையை எளிதாகக் காண்பிக்கும். அதுதான் பாதிப்படைந்த உள்ளத்திற்கு நீங்கள் தவறாதவராகக் காண்பிக்கும் அரிய செயலுமாகும்.
சிவப்பு நிறம் கொலையுணர்வைத் தூண்டவல்லது. சைத்தானின் பயங்கர எண்ணங்களுக்குச் சின்னமாக இந்நிறம் கருதப்படுகிறது. புரட்சிகரமான கொள்கையுடையவர்கள், கட்சியாளர்கள், தேசத்துரோகிகள், பாவம் செய்யத்தூண்டும் மோசக்காரர்கள் சிவப்பு நிற ஆடையை விரும்பி உடுத்துவார்கள்.
சிவப்பின் மற்றொரு தீமையான கோணம் இது. மோசமான சமூகத்தில் சீர்கேடான அந்தரங்க தொழில்களுக்கு சிவப்பு வண்ணத்தை விளம்பரமாகத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கிறார்கள். தீய செயலைத் தூண்டக்கூடிய சக்தி வாய்ந்தது. தவறு செய்யத் தூண்டும் எண்ணம் வருவதும் அல்லது வந்ததும் செந்நிறதிரவத்தை குடிகாரர்கள் நாடிப்போவது இதனால்தான்.
ஆன்மிகத்தில் சிவப்பு நிறம் அடுத்த மாதம். . .