மஞ்சள் நிறத்தின் நன்மை
இது தசைகளின் ஆற்றலைத் தூண்டும் அற்புத சக்தி படைத்தது. உடலின் எந்தப் பகுதியிலாவது மஞ்சள் அதிர்வு தடைப்பட்டால் உடலின் இயக்கம் நிறுத்தப்படும் அல்லது பக்கவாதம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மஞ்சள் நிறம் சிகப்பு, பச்சை நிறக் கதிர்களின் கலவையாகும். இரத்த நாளங்களின் இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கிறது. ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. பொலிவுடைய ஒரு கவர்ச்சியைத் தரும்.
இளமஞ்சள் எல்லோருடனும் ஒத்துழைத்து இணக்கமாக வாழத்தூண்டும். திருமணங்களில் தங்க நிறமான இந்த இளமஞ்சள் நிற உடைகளை மணமக்கள் அணிவது இதனால்தான். துக்கமான சோகநிலையை மாற்றி புத்திகூர்மையுடன் சிந்திக்கத் தூண்டும்.
மஞ்சள் நிறத்தின் தீமை
மிக பிரகாசமான பளீர் என்று கண்ணைப் பறிக்கும் எலுமிச்சை நிற மஞ்சள், மனநலம் பாதித்தவர்களை மிகவும் கிளர்ச்சியூட்டி பாதிக்கச் செய்யும். மேலும் அவர்கள் மூளையையும், மன அமைதியையும் பாதித்து, மரணப்படுகுழியிலும் தள்ளி நம்மை வேதனைக்குள்ளாக்கும். சக்தி படைத்தது. கோழைத்தனம், பயந்த சுபாவம், கெட்ட எண்ணங்களை உறுவாக்கித் தற்கொலை எண்ணம் முதலியவற்றை ஏற்படுத்தும். பிரகாசமான எலுமிச்சை நிறம் கொண்ட மஞ்சள் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் வல்லமை படைத்தது.
அரக்கு மஞ்சள், டல் மஞ்சள் என்ற வெந்தய நிற மஞ்சள் பூசப்பட்ட வண்ணத்தை குழந்தைகள் விரும்பாமல் அவர்களை மனம் பிடிக்காமல் செய்து சண்டை போடவும் கவலை கொள்ளவும் வைக்கும். இதை சுவரில் அடிக்கக் கூடாது. குழந்தைகளின் மனதைப் பாதிக்கச்செய்யும். குழந்தைகளை திருப்திப்படுத்த முடியாத ஓர் உணர்வை தூண்டவல்லது இந்த நிறம். பசியாறிய குழந்தையை அழும் மனப்பான்மையோடு இருக்கும்படி செய்து வீட்டில் சுற்றியுள்ள அடுத்தவர்களது வேலை, கவனம் முதலியவற்றைப் பாதிக்கச்செய்யும். அதனால் சிறு குழந்தைகளாக (5 வயது வரையே உள்ள குழந்தைகள்) இருப்போர் வீடுகளில் இந்த வண்ணத்தைச் சுவரில் பூசவேண்டாம்.
ஆன்மீகத்தில் மஞ்சள் நிறம் – அடுத்த மாதம் . . .