நிறைவுரை

ஞானாச்சாரியார் வரலாறு – 6 தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிப் பதினெண் சித்தர்களின் ‘மெய்யான இந்துமதம்’ மறுமலர்ச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்தவர் பதினோராவது ‘ஞானாச்சாரியார்’ அவர்களே ஆவார். ஆனால், இவருக்கு முன்னரே, இம்மெய்யான இந்துமதத்தின் ‘எண்வகை ஆச்சாரியார்களில்’ 1. பரமாச்சாரியார் 48 பேர், 2. ஆதிபரமாச்சாரியார் 48 பேர், 3. சிவாச்சாரியார் 48 பேர், 4. ஆதி சிவாச்சாரியார் 48 பேர், 5. ஈசுவராச்சாரியார் 48 பேர், 6. ஆதி ஈசுவராச்சாரியார் 48 பேர், 7.

ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார்

ஞானாச்சாரியார் வரலாறு – 5 வரலாற்றுச் சுருக்கம் – 3 அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் அவர்கள், 1. முதலாம் விசயாலயன் எனப்படும் வெற்றித் திருமகன், 2. பரகேசரி விசயாலயன், 3. முதலாம் ஆதித்தன், 4. முதலாம் பராந்தகன், 5. கண்டராதித்தர், 6. அரிஞ்சயன், 7. இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்), 8. உத்தம சோழன், 9. முதலாம் இராசராசன் எனப்படும் அருள்மொழித்தேவன் எனும் ஒன்பது மன்னர்களுக்கும் தாமே முடிசூட்டினார். இது இவருடைய அருளாட்சித்

ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார்

ஞானாச்சாரியார் வரலாறு – 4 வரலாற்றுச் சுருக்கம் – 2 பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் அமராவதியாற்றங்கரைக் கரூரில் பசுபதீசுவரர் கோயிலைக் கட்டித் தத்துவ நாயகமாகச் செயல்பட்டார். அதன் மூலம், மதவழிச் சமுதாயப் புரட்சியைச் செய்தார். அதன் பயனாக, வைகையாற்றங்கரை மதுரையில் அருளாட்சித் திருநகரில் மூன்று யுகங்களிலும் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் உள்ள நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தார்.

ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார்

ஞானாச்சாரியார் வரலாறு – 3 வரலாற்றுச் சுருக்கம் – 1 இம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) ‘மணீசர்கள்’ தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில்

அணிந்துரை

ஞானாச்சாரியார் வரலாறு – 2 ஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குருலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தாமெழுதிய 300-க்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால் அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ணைகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள்தான் அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும். அதற்காக, இவர்கள்

அறிமுகவுரை

ஞானாச்சாரியார் வரலாறு – 1 சித்தர்களின் கடவுட் கொள்கை சித்தர்கள் ‘அருவம்’, ‘உருவம்’, அருவுருவம், உருவ அருவம் எனும் நான்கு வகை வழிபாடுகளையும் கூறுகிறார்கள். கணக்கற்ற கடவுள்கள் உண்டு. கடவுள்கள் மனிதராகப் பிறப்பர்; மனிதர் கடவுளாக மாறுவர். எனவே, மானுட மொழி, இன, நாட்டு எல்லைகளுக்குட்பட்டவர்களே கடவுள்கள். இந்த எல்லைகளைக் கடந்து வழிபடுவதும்; ஒரே கடவுள்தான் உண்டென்பதும் தவறானவை, பயனற்றவை. உலக இன, மொழி, மத விடுதலையே ஆன்ம நேய ஒருமைப் பாட்டையும்; உலகச் சமத்துவச் சகோதரத்துவப்

error: Content is protected !!