திருமதி.S.D.சாந்தா சிவம் நம் மனம் நம் வசம் இல்லை என்றால் காலப்போக்கில் நம் கைவசம் எதுவுமே இல்லாமல் போய்விடும். பார்ப்பதையெல்லாம் இது தேவையா? இல்லையா? என யோசிக்காமல் வாங்க ஆரம்பித்தோமானால் நம் கைவசம் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து காணாமல் போய்விடும். இரண்டு கால்களுடன் வந்த பணம் போகும்போது பலகால்களுடன் போய்விடும். சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. சம்பாதித்ததைக் காப்பாற்றுவதுதான் பெரிய விஷயம். நிறைய சம்பாதிப்பவர் பணக்காரர் அல்ல. நிறைய சேமிப்பவரே பணக்காரர். நீங்கள் சம்பாதித்ததில் சிக்கனப்படுத்தி
திருமதி.S.D.சாந்தா சிவம் மொட்டை மாடியிலிருக்கும் வாட்டர் டேங்கில் இரவு குளிர்ந்து போயிருக்கும் தண்ணீர் பகலின் வெப்பத்தில் வெத வெதப்பான நிலைக்கு மாறிவிடும். பருவச் சூழலில் வெப்பமும், குளிர்ச்சியும் மாறிமாறி வருவது இயல்பு என உணர்கிறோம். அது போல், இன்பமும் துன்பமும் கலந்த சுழற்சியான வாழ்க்கைதான் நம் வாழ்வின் அடிப்படை உண்மையும். குளிர்ச்சியின் அருமையை வெயில் உணர்த்துவதைப்போல் வெயிலின் உக்கிரத்தை, குளிர்ச்சியை அனுபவித்து புரிந்துகொள் என்கிறது. ஓர் உண்மையை உணரக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சலில் படுத்திருக்கிறீர்கள் என்று
திருமதி.S.D.சாந்தா சிவம் ஒருவர் பேசும்போது, எதிரிலிருப்பவருக்கும் வாய்ப்புக் கொடுத்து, அமைதியாக அதே சமயம் விழிப்புணர்வும் கொண்டு சிரித்த முகத்துடன், உதடுகளில் புன்னகை ததும்ப, குரலில் இனிமை கலந்து பேசுவது ஒரு தனிக்கலை. இந்த சுபாவத்தோடு ஒருவர் எங்கு பேசினாலும் அனைவரையும் கவர்ந்து விடுவார். இந்த கவர்ச்சிகரமான செயலால் அருகில் உட்கார்ந்து கேட்பவர்கள் அவர் வசமாகிப் போய்விடுவார்கள். இப்படி அலட்டலில்லாத சுபாவம், முகபாவனைகள், உடல் மொழிகள் எல்லாம் இவரோடு அமர்ந்து கேட்பவரை என்ன காரணம் எனத் தெரியாத அளவுக்கு
திருமதி.S.D.சாந்தா சிவம் ஒருவர் உடலாலும் மனதாலும் அடிபடுகிறார் என்றாலே… ஏதோ ஒரு விதத்தில் ஏமாந்து போயிருக்கிறார் / ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்றே பொருள். ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். ஏமாற்றங்கள்தான், தவறான திசை இது என்று நம்மைத் திசை திருப்பி ஒரு நல்ல வழியை விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிர்ச்சி வைத்தியம். நம் விழிப்புணர்வு முழுமையாக இல்லாமல் போகும் அந்த சமயங்களில் நமக்கு பாதிப்பங்கும் நம்மை ஏமாற்றியவருக்குப் பாதிப்பங்கும் உண்டு. இதில் பரிதாபம் என்னவென்றால், தொடர்ந்து ஏமாந்து மனதால் சோர்ந்து
திருமதி.S.D.சாந்தா சிவம் நிறைந்த மனதோடு இருக்கும் ஒருவர் ஏழையாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறார். அதுவே நிறைவில்லாத மனதோடு வாழும் ஒருவர் பணக்காரராக இருந்தாலும் வருத்தத்தோடு வாழ்கிறார். நாம் வாழும் வாழ்க்கையில் பெரும்பாலும் அதிருப்திதான் நிறைந்திருக்கிறது. ஆனால் அதுதான் நாம் வாழும் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் நமக்குச் சொல்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். அது தானாகவே நிகழ்ந்து விடுவதில்லை. நாம் பயன்படுத்தும் அணுகுமுறையில் அது நல்லதாகவோ, கெட்டதாகவோ நிகழ்கிறது. நம் ஆசைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதால்
திருமதி.S.D.சாந்தா சிவம் ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் அடக்கி, மனிதப் பிறவியின் உண்மையான அர்த்தங்கள், அதன் பலன், பரிபூரணங்கள் என்ன? என்று உணர்ந்தால்தான் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க முடியும். நிதானம் நம்மை உயர்த்தி மேம்பட வைக்கும். “நிதானத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் நாம் வெற்றியின் முதல் படியில் கால் வைத்தவராவோம்” நிதானமில்லாத சந்தோஷம், தோன்றியதும் மறையும் நீர்க்குமிழி போன்றது. அப்பொழுது அதில் அவசரமும், ஆதங்கமும், அழுகைகளோடு கூடிய ஆர்பாட்டமும் ஆட்கொண்டு ஆளையே அசிங்கப் படுத்திக் காட்டும். படிக்கும்போது நிதானமிழந்தால் தேர்வில்